Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையிலிருந்து வெளி மாநிலத்திற்கு ரயில்கள் இயக்கம்! – நேர அட்டவணை இதோ!

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (08:28 IST)
தமிழகத்தில் மாநிலத்திற்குள் மட்டும் ரயில்சேவைகள் நடந்து வரும் நிலையில் தற்போது வெளி மாநிலங்களுக்கும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வுகளால் மாவட்டங்களுக்குள் 13 பயணிகள் ரயில்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்தபடியாக சென்னை – திருவனந்தபுரம், சென்னை – மங்களூரு வழித்தடங்களில் ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி செப்டம்பர் 27ம் தேதி இரவு 07.45 மணிக்கு சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல் திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு செப்டம்பர் 28 மதியம் 3 மணியளவில் சிறப்பு ரயில் புறப்படும்

சென்னை செண்ட்ரல் – மங்களூரு சிறப்பு ரயில் செப்டம்பர் 27 இரவு 8.30 மணிக்கும், மங்களூரு – சென்னை செண்ட்ரல் சிறப்பு ரயில் செப்டம்பர் 28 மதியம் 1.30 மணிக்கும் புறப்படும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments