Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன.. பாஸ் ஆகலையா?- தனித்தேர்வு முடிவுகளால் மாணவர்கள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (15:25 IST)
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தனித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் 10ம் வகுப்பு மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டது. ஆனால் டுடோரியல் மூலமாக எழுதும் தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்வு நடந்தது.

இந்நிலையில் தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10ம் வகுப்பு தனித்தேர்வில் 39 ஆயிரம் மாணவர்கள் எழுதிய நிலையில் வெறும் 8 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல 40 ஆயிரம் மாணவர்கள் பங்குபெற்ற 12ம் வகுப்பு தனித்தேர்விலும் 12% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments