Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஆட்சியை அரங்கேற்றாமல் எனது உயிர் போகாது: தமிழிசை

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2018 (22:18 IST)
கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் மோடி அலையால் பாஜகவிற்கு பெரும் வெற்றி கிடைத்தது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அக்கட்சி படுதோல்வி அடைந்து ஒரே ஒரு தொகுதியை மட்டும் கைப்பற்றியது. கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் அக்கட்சி தமிழகத்தில் பெரிய அளவில் செல்வாக்கு பெற்றதாக தெரியவில்லை. மாறாக அக்கட்சியின் மேல் அதிருப்திதான் மேலும் அதிகரித்துள்ளது.

இன்னும் நோட்டாவையே தாண்டாமல் இருக்கும் நிலையில் பாஜகவை ஆட்சியில் அரங்கேற்றியே தீருவேன் என்று பாஜகவினர் சூளுரைப்பது நகைப்புக்குரியதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியபோது, '22 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ள மோடி ஆட்சியை அகற்ற முடியாது என்றும், அதேபோல் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை அரங்கேற்றாமல் எனது உயிர் போகாது என்றும் ஆவேசமாக கூறினார்

மேலும் இந்தியாவின் முக்கால்வாசி பகுதியில் காவி பரவி விட்டதாகவும் வெகுவிரைவில் தமிழகத்திலும் கண்டிப்பாக காவி மலரும் என்றும் தமிழிசை நம்பிக்கை தெரிவித்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தான் இந்திய பொருளாதாரம் செம்மை அடைந்ததுள்ளதாகவும், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாகவும், எத்தனால் மூலம் எரிசக்தி கொண்டு வரவும், பேட்டரி கார்கள் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழிசை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments