Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாஸ்மாக்கில் இனிமே ரூ.10 எக்ஸ்ட்ரா வாங்கமாட்டோம்!.. சங்க மாநில தலைவர் பேட்டி...

Advertiesment
tasmac
தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 ரூபாய் கூடுதலாக வாங்குவது என்பது பல வருடங்களாக நடந்து வருகிறது.
கடந்த 5 வருட திமுக ஆட்சியிலும் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால், தற்போது விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் இருக்கும் நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் விக்னேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். மேலும், இது தொடர்பாக சில டாஸ்மாக் ஊழியர்கள் பணியிட நீக்கமும் செய்யப்பட்டனர்.

ஒருபக்கம் நகர்புறத்தில் உள்ள 2500 டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில்,
செய்தியாளர்களை சந்தித்த டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பழனி பாரதி ‘டாஸ்மாக் கடைகளில் இனி MRP-யை விட ஒரு ரூபாய் கூட கூடுதலாக வசூலிக்க கூடாது என்ற அரசின் அறிவுறுத்தலை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். மாநில முழுவதும் உள்ள அனைத்து சங்க நிர்வாகிகளும் MRP விலைக்கே மது விற்பனை செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளோம்’ என கூறியிருக்கிறார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ்மாக் முறைகேடு!.. செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு!..