Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1000 கோடி வரி ஏய்ப்பு? 15 கிலோ நகை பறிமுதல்.. ஜெகத்ரட்சகன் வீட்டில் அதிரடி ரெய்டு..!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (06:36 IST)
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் அவரது வீட்டில் 15 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி  ஜெகத்ரட்சகன் தொடர்புள்ள இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் ஆயிரம் கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினரிடமிருந்து கணக்கில் வராத 15 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் ஜெகத்ரட்சகன்  தொடர்புடைய இடங்களில் இருந்து ரூ.2.45 கோடி மதிப்புடைய ஏழு வெளிநாட்டு உயர் ரக வாட்சுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெகத்ரட்சகன் மகளுக்கு சொந்தமான விடுதியில் இந்த வாட்சுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.  

ஜெகத்ரட்சகனுக்கு  சொந்தமான சொத்துக்கள் மற்றும் அசையா சொத்து அசையும் சொத்துக்களை பார்த்து  வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments