Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர் கைது! பத்மா சேஷாத்திரி பள்ளி ஒத்துழைக்கவில்லை - போலீஸார்

Webdunia
திங்கள், 24 மே 2021 (15:55 IST)
சென்னையில் உள்ள பிரபல பள்ளியான பத்மா சேஷாத்திரி பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் சற்றுமுன் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது, மாணவிக்கு செல்போனில் பாலியல் தொந்தரவு அளித்த மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலனை துணைக்காவல் ஆணையர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸார்   சுற்றி வளைத்து  கைது செய்தனர்.

இன்று காலையில் இருந்து இந்த விவகாரம் பூதாகரம் ஆனதை அடுத்து,  இது தமிழகத்தில் பேசுபொருளானது. எனவே மடிப்பாக்கத்தில் வசித்து வரும் ராஜகோபாலனை பிடித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும், இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கிடையே பத்மா ஷேசாத்ரி பள்ளி நிர்வாகம் ஆசிரியர் ராஜகோபாலனை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்