Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவை எதிர்த்து 40 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்: ஆசிரியர்கள் அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (11:49 IST)
திமுகவை எதிர்த்து 40 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என  ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி  பெற்றோர் நல சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கையை அரசு இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.

அதுமட்டுமின்றி உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களை கைது செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்களையும் கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  

இந்த நிலையில்  வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக நிற்கும் 40 தொகுதிகளிலும் ஆசிரியர்களை நிறுத்தப் போகிறோம் என்றும் நேரடி தேர்தல் களத்தில் சந்தித்து எங்கள் பலத்தை காட்டுவோம் என்றும் 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments