Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலை மறுத்த பெண்; வீட்டு முன்பு வசிய பூஜை செய்த இளைஞர்! – தெலுங்கானாவில் பரபரப்பு!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (11:43 IST)
காதலை ஏற்க மறுத்த பெண்ணை வசியம் செய்ய யூட்யூப் பார்த்து பூஜை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியை சேர்ந்தவர் முரளி. இவர் ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன் அடிக்கடி செல்போன் வழியாக பேசி வந்துள்ளார். அவரை நேரில் சந்திக்கும்படி கேட்டு வந்த நிலையில் முரளியை நேரில் சந்தித்த பெண் அவரை பிடிக்காததால் அவருடன் பேசுவதை தவிர்த்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவரை வசியம் செய்ய யூட்யூபில் பல வீடியோக்களை பார்த்த முரளி சுடுகாட்டிற்கு சென்று மண்டையோடு உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து காதலியின் வீட்டு முன்பு வசிய பூஜை நடத்தியுள்ளார். வீட்டின் முன் அமானுஷ்யமான பொருட்களை வைத்து முரளி செய்த காரியம் குறித்து பெண் அளித்த புகாரில் முரளி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

பகல்ஹாம் தாக்குதல் மத்திய அரசின் திட்டம் தான்.. யூடியூபில் அவதூறு பரப்பியவர்கள் கைது..!

வெங்காயம் விலை படுவீழ்ச்சி.. ஒரு கிலோ ரூ.10 என விற்பனையாவதால் விவசாயிகள் கவலை..!

’எனது சிந்தூரை திருப்பிக் கொடுங்கள்’! இந்தியாவிடம் கண்ணீர் விட்டு கதறும் ராணுவ வீரரின் கர்ப்பிணி மனைவி!

அடுத்த கட்டுரையில்
Show comments