Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத உணர்வை தூண்டியதாக வழக்கு..!! அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை..!

Senthil Velan
திங்கள், 26 பிப்ரவரி 2024 (15:25 IST)
மத உணர்வை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது,  பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ அமைப்பு தான் முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.
 
இதையடுத்து இரு மதத்தவர்களுக்கு இடையே வெறுப்புணர்வை தூண்டுவதாக அண்ணாமலை மீது சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக மனு தாக்கல் செய்தார்.
 
இந்த மனு மீதான விசாரணைக்கு நேரில் ஆஜராக அண்ணாமலைக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.  இந்த சம்மனுக்கு எதிராகவும்,  தனது மீதான புகார் மனுவை ரத்து செய்ய வேண்டும் என அண்ணாமலை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அண்ணாமலை மீதான புகார் மனுவை ரத்து செய்ய மறுத்ததோடு,  மனு மீதான வழக்கை சட்டத்திற்குட்பட்டு சேலம் நீதிமன்றம் விசாரிக்கலாம் என உத்தரவிட்டது.  
 
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  அந்த மேல்முறையீட்டு மனுவில்,  நீதிமன்ற சம்மனுக்கும் விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
 
இந்த  மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபான்கர் தத்தா,  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். 

ALSO READ: ஜி.கே. மூப்பனாரின் ஆத்மா ஜி.கே வாசனை மன்னிக்காது..! செல்வப்பெருந்தகை...

மேலும்  சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷுக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணையிட்ட நீதிபதிகள், அண்ணாமலை பேச்சின் முழு விவரத்தின் மொழிபெயர்ப்பையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments