Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைகுப்புற கவிழ்ந்த தேர் ...அதிர்ச்சி சம்பவம்..

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (15:09 IST)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலூகா எலவனாசூர் கோடை அங்காளம்மன் கோவிலில் மாசி மாதம் தேர்த்திருவிழா நடந்து வருகிறது.

நேற்று காலை சுமார் 10 : 30 மணியளவில் தேரில் அம்மன் சிலை வைத்து அலங்கரித்து, சிறப்பு பூஜை தீபாராதனையுடன் தோரோட்டம் துவங்கியது.

அப்போது, அங்குள்ள முக்கிய சாலைகளில்  மதியம் 1:30 மணிக்கு மேட்டுத்தெருவில் சென்றபோது, ஒரு பள்ளத்தில் தேர்ச்சக்கரம் சிக்கியது. இதனால் 24 அடி உயரமுள்ள தேர் சாலையில்  கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதனையடுத்து, இரண்டு பொக்ளைன் இயந்திரங்களை வரவழைத்து, தேரை மீட்டனர். பின்னர் தேர் நிலையை தேர் அடைந்தது. இந்த விபத்தில் பூசாரி சுந்தரம் லேசாயான காயம் அடைந்தார். அவருக்கு உளுந்தூர் பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, ராகுல் காந்தியுடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முக்கிய ஆலோசனை.. என்ன காரணம்?

தமிழகத்தில் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பேச்சு: நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம்..!

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments