Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பகலில் சமையல்காரன், இரவில் கொள்ளைக்காரன் - வேற லெவல் திருடன்

Webdunia
சனி, 18 மே 2019 (11:48 IST)
பகலில் சமையல்காரனாக வேலை செய்துவிட்டு, இரவில் கடைகளை உடைத்து கொள்ளையடிக்கும் மர்ம கொள்ளைக்காரனை போலீஸார் கைது செய்தனர்.
 
சென்னையில் உள்ள அண்ணாநகர் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திருடப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. கொள்ளைக்கான காரணங்கள் பிடிபடாத நிலையில் கொள்ளையனை பிடிக்க மாவட்ட துணை ஆணையர் சுதாகர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. 
 
தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படை போலீஸார், தேடுதலின் ஒரு பகுதியாக மெட்ரோ ரயில் நிலைய கண்காணிப்பு கேமராக்களை சோதித்தபோது அதில் சந்தேகத்திற்குரிய மர்ம ஆசாமி ஒருவரின் நடமாட்டத்தை கண்டுபிடித்தனர்.
 
அந்த ஆசாமியை கைது செய்து விசாரித்தபோது, அவர் அரியலூரை சேர்ந்த சிவா என்பது தெரிய வந்தது. வாய்பேச முடியாத இவர் காலை வேளைகளில் சமையல்காரனாக பணிபுரிந்து விட்டு, ஆடம்பர செலவுகளுக்காக இரவில் திருடுவதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் அண்ணாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments