Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலிக்குமாறு சிறுமியை அடித்து மிரட்டிய கொடூரன்!

Webdunia
திங்கள், 20 மே 2019 (17:31 IST)
தன்னைக் காதலிக்க வேண்டும்  என வலியுறுத்தி சிறுமியைத் தாக்கிய வாலிபனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் ( 18). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
 
இந்நிலையில் லட்சுமிபுரம் செகரெட்டரியேட் காலனியில் வசித்து வந்த 17 வயது சிறுமியிடம் தன்னைக் காதலிக்க வேண்டும் என்று தொல்லை கொடுத்துள்ளான்.
 
நேற்று முன்தினம் மாலையில் அந்த சிறுமியை வழிமறித்து தன்னைக் காதலிக்க வேண்டும் என மிரட்டியுள்ளான்.  அதற்கு சிறுமி மறுக்கவே அவளை அடித்து துன்புறுத்தியுள்ளான்.
 
மேலும் தன்னை காதலிக்க வேண்டும் இல்லை என்றால் பணம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளான். இதனையடுத்து சிறுமியின் தந்தை போலீஸில் புகார் அளித்த நிலையில் நேற்று காலையில்  போலீஸார் சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments