Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்டவர் கொலை…பதறவைக்கும் சம்பவம்

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (00:08 IST)
கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள பகுதியில் வசித்து வந்த ஒரு இளைஞர் அங்குள்ள பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இவர் கடந்த செவ்வாய் இரவில் ஒரு ஹோட்டலில் புரோட்டா வாங்குவதற்காகச் சென்றுள்ளார்.

அப்போது, கடைக்காரர் இளைஞரின் பார்சலுக்கு ஒரு குருமா பாக்கெட் கொடுத்துள்ளார். ஆனால் இளைஞர் தனக்குக் கூடுதலாகல் ஒரு குடுமா பாக்கெட் கேட்டுள்ளார்.

அப்படி தரமுடியாது என கடைக்காரர் கூறியதாகத் தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், கடையிலுள்ள புரோட்டா மாஸ்டர், கடை உரிமையாலர் உள்ளிட்ட 3 பேர் இளைஞரை அடித்துள்ளனர். இதில் இளைஞர் கடுமையாக காயம் அடைந்துள்ளார்.

பின்னர் அருகில் இருந்தவர்கள் இளைஞரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments