Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் சிக்கிய மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய ஜெயக்குமார்

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (16:51 IST)
சென்னை புழல் அருகே விபத்தில் சிக்கிய மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை புழல் அருகே இன்று விபத்தில் சிக்கித் தவித்த மூதாட்டி ஒருவரை மக்கள் யாரும் கண்டுகொள்ளாமல் சென்றனர்.

அப்போது அந்த வழியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விபத்தில் சிக்கிய மூதாட்டியின் கால்களைப் பிடித்துத் தூக்கி, ஆட்டோவில் ஏற்றி, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும், ஆட்டோவில் மூதாட்டி செல்வதற்கான  பணத்தையும் கொடுத்து, அவரை அனுப்பி வைத்தார்.

''நாளை நமக்கும் இதே நிலைதான் இருப்போம் சற்று ஈரத்துடன்…மருத்துவ உதவியே மகத்தான உதவி'' என்று  ஜெயக்குமார் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments