Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 24 மணி நேரத்திற்கு தகிக்க போகும் வெயில்..! – வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

Prasanth Karthick
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (14:39 IST)
தமிழ்நாட்டில் வெயில் காலம் நடந்து வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பநிலை பல இடங்களில் உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் இன்னும் அக்கினி வெயிலே தொடங்காத நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த மாதம் தொடக்கம் முதலே வெயிலின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விட உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று தமிழகத்தின் ஓரிரு மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய கூடும். கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி பகுதியில் வறண்ட வானிலையே நிலவும். நாளை முதல் ஏப்ரல் 25 வரை மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மிதமான அளவில் மழை பெய்யக் கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்சமாக தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்பநிலை 2-3 டிகிரி வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். சமவெளி பகுதிகளில் 39-42 டிகிரி செல்சியஸும், இதர பகுதிகளில் 34-39 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக் கூடும் என கூறப்பட்டுள்ளது,

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments