Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை வெளுக்கத் தொடங்கிய வெயில்..! நெருங்கி வரும் கோடைக்காலம்!

Prasanth Karthick
வியாழன், 22 பிப்ரவரி 2024 (11:08 IST)
குளிர்காலம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது.



வடகிழக்கு பருவமழை காலத்தை தொடர்ந்து வந்த குளிர் காலம் தற்போது வரை தமிழகத்தில் நீடித்து வருகிறது. மார்கழி, கார்த்திகை மாதங்களில் பல பகுதிகளில் கடுங்குளிர் நிலவியது. தற்போது மாசி மாதம் பிறந்தது முதலாக அதிகாலை பனிப்பொழிவு குறையத் தொடங்கியுள்ளது.

முக்கியமாக சென்னையில் பல பகுதிகளில் கடந்த வாரம் முதலாகவே வெயில் அதிகரித்துள்ளது. காலை 10, 11 மணிக்கு மேல் வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இன்னும் கோடைக்காலமே தொடங்காத நிலையில் வெயில் இப்படி வாட்டத் தொடங்கியுள்ள நிலையில், கோடைக்காலத்தில் உஷ்ணம் மேலும் அதிகமாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் ப்ரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

ALSO READ: விஜய் நேரில் வந்து கேட்டு கொண்டாலும் ஆலோசனை கூற மாட்டேன்: பிரசாந்த் கிஷோர்

இதுகுறித்து கூறிய அவர் “வரும் காலங்களில் பனிப்பொழிவு முழுவதும் குறைந்துவிடும். கோடைக்காலம் தொடங்கப்போவதற்கான அறிகுறியாகவே தற்போது வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இனிவரும் நாட்களில் வெயில் இன்னும் அதிகரிக்கும்” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை.. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பதிவு..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு.. முழு விவரங்கள்..!

நாடு சுதந்திரம் ஆன பின்னர் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற முதல் மாணவர்.. உபி கிராமத்தில் அதிசயம்..!

இந்திய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான்? - சைபர் தாக்குதலால் பரபரப்பு!

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

அடுத்த கட்டுரையில்
Show comments