Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகேஷ் அம்பானியை முந்திய தமிழர் ! எதில் தெரியுமா ?

Webdunia
புதன், 16 அக்டோபர் 2019 (20:58 IST)
நாட்டில் அதிக அளவில் நன்கொடை கொடுத்தவர்களில் ஹெச் சி எல் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் முதலிடம் பிடித்துள்ளார். 
ஹெசிஎல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ்நடார் ஒரு தமிழர். இவர் சமுதாயத்தில்  ஏராளமான உதவிகள் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு அதிகளவில் நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியலில் ரூ. 826 கோடிகள் சமூக பணிகளுக்காக நன்கொடை கொடுத்துள்ளார் ஷிவ்நாடார்.கம்பெனிகள் சட்டத்தின் படி கார்பரேட் நிறுவங்கள் தங்களின் வருவாயில் 2 % சமுதாய மேம்பாட்டு பணிகளுக்கு செலவிட வேண்டுமெனபது விதி. இந்நிலையில் நாட்டில் மிக முக்கிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ஷிவ்நாடார் வேறு யாரையும் விட அதிகளவில் நன்கொடை கொடுத்துள்ளார்.

இதற்கடுத்து விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி ரூ. 453 கோடி நன்கொடை வழங்கி இரண்டாம் இடத்தில் உள்ளார். நாட்டில் முதல் இடத்தில் உள்ள கோடிஸ்வர தொழிலதிபரான முகேஷ் அம்பானி ரூ. 402 கோடி நன்கொடை கொடுத்து மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
 
ஷிவ்நாடார் , ரூ 15 கோடி கொடுத்து, தமிழகத்தில் தான் படித்த பள்ளியை தனியார் பள்ளிக்கு இணையான வசதிகள் செய்து கொடுத்துள்ளது பெரும் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments