Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடிவதற்குள் 21 மாவட்டங்களை குளிப்பாட்ட போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
ஞாயிறு, 2 ஜூன் 2024 (19:32 IST)
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கான மழை வாய்ப்பு அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.



தமிழ்நாட்டில் ஏப்ரல் முதலாக கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் மே மாதம் பாதியிலிருந்தே பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழையும் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருநெல்வேலி, கோவை, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 21 மாவட்டங்களில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments