Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் ரயிலில் பிரேக் பகுதியில் புகை வந்ததால் பரபரப்பு

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (13:14 IST)
திருவனந்தரபுரம் – சென்னை விரைவு ரயில் இன்று காலை நெமிலிச்சேரி அருகே வரும்போது பி1 பெட்டியில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபகாலமாக இந்தியாவில் ஓடும் ரயில்களில் சில  இடங்களில் விபத்து ஏற்பட்டது. குறிப்பாக ஓடிஷா ரயில் கோர விபத்தில்  300க்கும் அதிகமானோர் பலியாகினர்.

இதையடுத்து, ஆன்மிக சுற்றுலா ரயிலில் வந்த ரயிலில் சிலிண்டர் வைத்து சமைத்ததால் பெரும் விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, ரயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  திருவனந்தபுரம் –சென்னை விரைவு ரயில் இன்று காலை நெமிலிச்சேரி அருகே வரும்போது, பி1 பெட்டியின் பிரேக் பகுதியில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தப் பெட்டியில் இருந்த பயணிகள் பதற்றத்தில் கீழே இறங்கினர். உடனே ரயிலில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டதை அடுத்து, 20 நிமிடங்கள் தாமதாக ரயில் புறப்பட்டுச் சென்றதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

இதுதான் தமிழன் கலாச்சாரம்! சென்னை சிறுவன் செயலால் வியந்த வெளிநாட்டு பயணி! - வைரலாகும் வீடியோ!

இனி போட்டோ மாத்தி ஏமாத்த முடியாது! சிப் பொருத்திய e-Passport அறிமுகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments