Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் + வாக்காளர் அடையாள அட்டை - இணைப்புக்கு திருமா எதிர்ப்பு!!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (10:23 IST)
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

 
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் எனும் நிலை உள்ள நிலையில் தற்போது வாக்காளர் எண்ணுடன் ஆதாரை இணைக்க மத்திய முடிவு எடுத்துள்ளது. வாக்காளர் எண்ணுடன் ஆதாரை இணைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
 
ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் தேர்தல் சீர்திருத்த நடவடிக்கை மூலம் மின்னணு வாக்குப்பதிவு உள்ளிட்ட செயல்பாடுகளை அறிமுகம் செய்யவும் போலி வாக்காளர்களை களையவும் முடியும் என கூறப்பட்டது. 
 
ஆனால் இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சட்ட திருத்த மசோதாவை திமுக, காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்க வேண்டும்.  
 
மேலும், இது மிகவும் ஆபத்தானது. தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு வாக்களிக்க சிறுபான்மையினரை நீக்குவதற்கு இது ஏதுவாக அமைந்துவிடும். எனவே இது மிகவும் ஆபத்தான மசோதா, இதை அனைத்து கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments