Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனிச்சின்னத்தில் தான் போட்டி: வைகோவை அடுத்து திருமாவளவனும் கருத்து!

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (11:43 IST)
அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள ஒரு சில அரசியல் கட்சிகள் அதிமுக மற்றும் திமுகவின் சின்னத்திலேயே போட்டியிட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட திமுக கூட்டணியில் இருந்த மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் திமுக கூட்டணியில் நாங்கள் இருந்தாலும் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாது என்றும் எங்கள் கட்சியின் சின்னமான பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று கூறியிருந்தார் 
 
அதேபோல் சற்று முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என்று தெரிவித்து உள்ளார்
 
வைகோ மற்றும் திருமாவளவன் ஆகிய இருவரும் திமுகவின் சின்னத்தில் போட்டியிட விரும்பவில்லை என்ற கருத்தை கூறியிருப்பது கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்..! - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments