Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு -மழைக்கு பலியாகும் உயிர்கள்

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (14:03 IST)
திருவாருர் அருகே அறுந்த கிடந்த மின்சார கம்பியை மிதித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. 
 
சமீபத்தில் கொடுங்கையூரில் இரு சிறுமிகள் தெருவில் அறுந்து கிடந்த மின்சார கம்பிகளை மிதித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இது சென்னை வாசிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
அவர்களுக்கு அரசு ரூ.3 லட்சத்தை இழப்பீடாக அளித்துள்ளது. ஆனால், ரூ.10 லட்சம் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. அதேபோல், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது என அமைச்சர் வேலுமணி கூறியிருந்தார். 
 
இந்நிலையில், மீண்டும் அதே போன்ற சம்பவம் திருவாரூர் அருகே நடந்துள்ளது. 
 
திருவாரூருக்கு அருகே உள்ள மணலகரத்தில் கலியபெருமாள்(65) என்ற விவசாயி, தனது வயலில் சம்பா பயிரில் தேங்கியிருந்த மழை நீரை அகற்ற சென்ற போது அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்து தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
 
சாலையில் அறுந்து கிடக்கும் மின்சார கம்பியை மிதித்து தொடர்ச்சியாக உயிர்கள் பலியாகி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments