Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்வாயில் கொட்டப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள்.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

Webdunia
சனி, 9 டிசம்பர் 2023 (13:27 IST)
தாம்பரம் அருகே ஆயிரக்கணக்கான பால்பாக்கெட்டுகள் கால்வாயில் கொட்டப்பட்டு இருப்பதை பார்த்து அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தனர். குறிப்பாக திங்கள் செவ்வாய் புதன் ஆகிய மூன்று நாட்கள் பல பகுதிகளுக்கு பால் சென்று சேரவில்லை. தற்போது தான் நிலைமை ஓரளவு சீராகி வருகிறது. 
 
இந்த நிலையில் ஒரு பாக்கெட் பாலுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் தத்தளித்த நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்டுகள் தாம்பரம் கால்வாயில் கொட்டப்பட்டு இருப்பதை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
 
வெள்ள பாதிப்பால் பொதுமக்கள் பால் கிடைக்காமல் அவதி உற்ற நிலையில் கால்வாயில் உள்ள ஆயிரக்கணக்கான பால் பாக்கெட்டுகளை பார்த்து மக்கள் ஆவின் நிர்வாகம் மீது அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments