Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு! – போலீஸ் தீவிர கண்காணிப்பு!

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (11:25 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. தமிழகம் முழுவதும் 60 சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவாகியுள்ளது. சில இடங்களில் இயந்திர கோளாறு, மின்தடை உள்ளிட்ட காரணங்களால் சில மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு வார்டு வாரியாக வாக்கு பெட்டிகள் அடுக்கிவைக்கப்பட்ட பிறகு வாக்கு எண்ணும் மையமும் சீல் வைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 22ம் தேதி வாக்கு எண்ணப்பட உள்ள நிலையில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

வங்கதேசத்தினர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய வீடுகள் மொத்தமாக இடிப்பு.. டெல்லியில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments