Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்போரூர் எம்எல்ஏ விரைவில் கைது செய்யப்படுவார்: செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி பேட்டி

Webdunia
ஞாயிறு, 12 ஜூலை 2020 (11:52 IST)
திருப்போரூர் எம்எல்ஏ விரைவில் கைது செய்யப்படுவார்
நிலத்தகராறு காரணமாக திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மன் தரப்பிற்கும், குமார் என்பவரின் தரப்பிற்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதில் இதயவர்மனின் தந்தை லக்ஷ்மிபதி , குருநாதன், மனோகரன் ஆகிய மூவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது
 
இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ இதயவர்மன் காரில் சென்ற குமாரை துப்பாக்கியால் சுட்டதாகவும், ஆனால் அந்த துப்பாக்கி குண்டு அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தையூர் கோமா நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசனின் மீது பாய்ந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
 
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும், இந்த கோஷ்டி மோதல் சம்பவம் தொடர்பாக 4 டிஎஸ்பிக்கள் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments