Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயுத பூஜை தினத்தில் சாமி சிலை, புகைப்படம் வைக்க கூடாது என அறிக்கையா? மருத்துவக் கல்லூரி விளக்கம்.

Ayudha Puja
Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (10:27 IST)
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆயுத பூஜையை முன்னிட்டு மதம் சார்ந்த சாமி புகைப்படமோ சிலையோ வைக்க கூடாது என அந்த கல்லூரியின் டீன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக செய்திகள் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில்  இவ்வாறு வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என மருத்துவமனை நிர்வாகம்அறிக்கை வெளியிட்டுள்ளது.  திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் எந்த விதமான சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை என்றும் தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது என்றும் இது உண்மைக்கு புறம்பானது என்றும் மருத்துவமனை டீன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
 
இந்த அறிக்கை உண்மை என நம்பி பாஜகவை சேர்ந்த சிலர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியின் டீன் இந்த விளக்கத்தை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments