Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைப்பொருள் விநியோகம் குறித்து தகவல் தந்தால் சன்மானம்! – திருவள்ளூர் காவல்துறை அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (14:29 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் தந்தால் சன்மானம் என திருவள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் போதைப்பொருள், குட்கா விற்பனை குறித்து தமிழக காவல்துறை தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதனால் கடந்த 10 நாட்களுக்குள் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல டன் குட்கா மற்றும் போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திலும் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், திருவள்ளூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விநியோகம் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும், மேலும் தகவல் தெரிவிப்பவர்களின் அடையாளம் ரகசியமாக காக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்திற்கு ரூ.2,999 கோடியை விடுவித்தது மத்திய அரசு.. ஆர்ப்பாட்டத்திற்கு கிடைத்த பலன்?

நாடு கடத்தப்பட இருந்த பாகிஸ்தான் நபர் மாரடைப்பால் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

கொளுத்தும் கோடை வெயில்! பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுகிறதா? - அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்!

கள்ளக்காதலியின் 16 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை: 45 வயது நபர் கைது..!

இன்று முதல் வி.ஐ.பி. சிறப்பு தரிசனம் நேரம் மாற்றம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments