Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமானால் எங்கள் வாழ்க்கையை இழந்துட்டோம்.. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி குமுறல்..!

Mahendran
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (18:13 IST)
சீமானால் எங்கள் வாழ்க்கையை இழந்து விட்டோம் என்று நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி குமுறலுடன் தெரிவித்திருப்பது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், கரு பிரபாகரன் என்ற  நிர்வாகி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பல குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தினார்.

"14 ஆண்டுகளாக நாங்கள் நாம் தமிழர் கட்சியில் உள்ளோம். ஈழ மக்களை காப்பாற்ற கட்சி ஆரம்பித்தோம், தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுத்தோம், பலமுறை சிறை சென்றுள்ளோம்.

கிருஷ்ணகிரி மண்டலத்தில் மட்டும் ஒரு லட்சம் வாக்குகளை கடந்த பாராளுமன்ற தேர்தலில் கட்சிக்காக பெற்று தந்தோம். கட்சியை ஆரம்பித்த போது பல மாநில பொறுப்பாளர்கள் இருந்தனர். ஆனால் தற்போது அவர்கள் கட்சியில் இல்லை. திட்டமிட்டு ஒரு சிலர் ஒதுக்கப்படுகிறார்கள்.

14 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தவர்களுக்கு எந்தவித மரியாதையும் இல்லை; அவர்கள் நிராகரிக்கப்படுகின்றனர். எங்கள் இளமைக்காலம் முழுவதும் கட்சிக்காகவே சென்றுவிட்டது. நாங்கள் பிச்சை எடுத்து கட்சிக்கு நிதி சேர்த்தால், அந்த நிதியில் சீமான் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்.

சீமானின் வீடு இரண்டரை லட்சம் ரூபாய் வாடகையில் உள்ளது, அவருக்கு 15 வேலையாட்கள் இருக்கிறார்கள். அவை அனைத்தும் கட்சியின் பணம்," என்று அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments