Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ.சி பஸ்ஸில் இனி சொகுசா போகலாம்: டிக்கெட் விலையை குறைத்த அரசு!

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (12:12 IST)
அரசு ஏ.சி பேருந்துகளில் மக்கள் பயணிப்பதற்கான ஆர்வத்தை அதிகரிக்க டிக்கெட் விலையை குறைத்துள்ளது அரசு.

தமிழக அரசு சார்பில் சென்னை உள்ளிட்ட நகர பகுதிகளில் உள்ளூர் ஏ.சி பேருந்துகள் இயங்கி வருகின்றன. ஆனால் ஏ.சி பேருந்துகளில் டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாக மக்கள் பலர் கருதுகின்றனர். அதனால் ஒருசிலரை தவிர மற்ற பயணிகள் ஏ.சி பேருந்து வசதியை பயன்படுத்துவது இல்லை.

அவர்களது பகுதிகளில் ஏ.சி பேருந்து வசதி இருந்தாலும் காத்திருந்து சாதாரண கட்டண பேருந்துகளில் கூட்ட நெரிசலில் செல்லும் நிலை உள்ளது. ஏசி பேருந்து பயன்பாட்டை அதிகரிக்கவும், பேருந்துகளில் மக்கள் கூட்ட நெரிசலில் செல்வதை தவிர்க்கவும் ஏ.சி பேருந்து டிக்கெட் கட்டணத்தை குறைத்துள்ளது போக்குவரத்து கழகம்.

அதன்படி ஏ.சி பேருந்துகளில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணமாக 15 ரூபாயும், அதிகபட்சமாக 40கி.மீ தூரத்திற்கு பயணிக்க 60 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் கட்டண குறைப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments