Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. எத்தனை பேர் தேர்ச்சி?

Siva
திங்கள், 2 செப்டம்பர் 2024 (15:44 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த தேர்வை எழுதியவர்கள் ஆர்வத்துடன் முடிவுகளை பார்த்து வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன் முடிவுகள் வெளியானது. மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  வரும் டிசம்பர் 10 முதல் 13 ஆம் தேதி வரை குரூப் 1 முதன்மை தேர்வானது நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 28 ஆம் தேதி  வெளியானது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்த தேர்வில் முதலில் முதல்நிலை தேர்வும், அதன்பின்னர்  முதன்மை தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி குரூப் 1 முதல் நிலை தேர்வு நடந்த நிலையில் மொத்தம் 90 பணியிடங்களுக்கு 1.59 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், முதன்மை தேர்விலும் தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்படும்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments