Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப்-1 முதனிலைத் தேர்வு தேதி திடீர் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (21:07 IST)
குரூப்-1 முதனிலைத் தேர்வு வரும் மார்ச் 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  தற்போது இந்த தேர்வு, மே மாதம் கடைசி வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 
 
பாடத்திட்டம், தேர்வுத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதே தேதி மாற்றத்திற்கான காரணம் என டி.என்.பி.எஸ்.சி., விளக்கமளித்துள்ளது.
 
மாற்றப்பட்ட  குரூப்-1 தேர்வின் முதன்மை எழுத்துத்தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் புதிய பாடத்திட்டத்தின்படி விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில் அவகாசம் வழங்கவே தேர்வு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி., கூறியுள்ளது.
 
மேலும் டி.என்.பி.எஸ்.சி.,  குரூப்-1 முதன்மை எழுத்துத்தேர்வு ஜூலை 2வது வாரம் நடத்தப்படும் எனவும் டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான டாஸ்மாக் துணை மேலாளர்.. தீவிர விசாரணை..!

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments