Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (13:46 IST)
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை,  தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு
 
அதேபோல் நாளை தர்மபுரி, நாமக்கல், சேலம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் நாளை மறுநாள் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளிலும், ஜூலை  மற்றும் 10 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும்  ஜூலை 8 முதல் 10ஆம் தேதி வரை அரபிக்கடலில் கர்நாடகா கேரளா லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் அரபிக்கடல், தென்மேற்கு, மத்திய மேற்கு பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments