Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு.. கொடியசைத்து தொடங்கி வைத்த உதயநிதி!

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2023 (07:52 IST)
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சற்றுமுன் கொடியை துவக்கி வைத்தார்.
 
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். மதுரை அவனியாபுரம், திருச்சி சூரியூர், மதுரை பாலமேடு உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஏராளமான காளையர்கள் கலந்து கொண்டனர். 
 
இந்த நிலையில் இன்று உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் வந்துள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்புடன் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் சற்று முன் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அவிழ்க்கப்படும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காணாமல் போன ‘அன்னாபெல்’ பேய் பொம்மை.. அடுத்தடுத்து நடக்கும் துர் சம்பவங்கள்! - பீதியில் உறைந்த மக்கள்!

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த ஈபிஎஸ்! முதல்வர் முக ஸ்டாலின்

இடியை கண்டாலும் பயம் இல்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச்சென்றது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

பாகிஸ்தானை ஓட ஓட விரட்டிய ராக்கெட் லாஞ்சர்கள்.. இந்தியாவிடம் ஆர்டர் கொடுத்த இஸ்ரேல்..!

கனமழை எச்சரிக்கை: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை! - வனத்துறை உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments