Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நிதி முதல் தவணை வழங்கும் திட்டத்திற்கு டோக்கன்

Webdunia
திங்கள், 10 மே 2021 (21:38 IST)
கரூர் அடுத்த நெரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த கொரோனா நிதி முதல் தவணை வழங்கும் திட்டத்திற்க்காக ரூ 2 ஆயிரம் வழங்கும் பணிக்கான டோக்கன் வழங்கும் பணியில் கிருஷ்ணராயபுரம் முன்னாள் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் மற்றும் நெரூர் வடபாகம் முன்னாள் தலைவர் மணிவண்ணன் கலந்து கொண்டனர்.
 
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் வடபாகம் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் மணிவண்ணன் மற்றும் அவரது மனைவியும், கிருஷ்ணராயபுரம் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வுமான கீதா மணிவண்ணன் ஆகியோர் நேற்று தங்களை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையிலும், தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான செந்தில்பாலாஜி தலைமையில் திமுக வில் இணைத்து கொண்டனர். இந்நிலையில், இன்று நெரூர் வடபாகம் பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாசியுடனும், தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலின் படி தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் பொருட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதியாக முதல் தவணையாக ரூ 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தினை, 165 நெரூர் வடபாகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராயன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் மகளிரணி நிர்வாகி, பொதுமக்கள் என்று ஏராளாமனோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை! தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் பக்கம் முடக்கம்! இந்தியா அதிரடி..!

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர்.. 6 நாளாச்சு! எப்போ காப்பாத்துவீங்க?? - காங்கிரஸ் கேள்வி!

எதிர்த்து பேசியதால் மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்.. போலீசில் புகார்

பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரர்.. 6 நாட்களாக மீட்க முடியவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments