Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய உச்சம் தொட்ட தக்காளி விலை! – தொடர் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (09:22 IST)
கடந்த வாரங்களில் ஏற்பட்ட கனமழையால் தமிழகத்தில் தக்காளி தொடர்ந்து விலை உயர்ந்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்த நிலையில் மார்க்கெட்டுகளில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் தினசரி ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் உட்பகுதிகளில் இருந்து 100 லாரிகளில் காய்கறி வரத்து இருந்த நிலையில் தற்போது 35 லாரிகளே வருவதாக கூறப்படுகிறது.

ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில் இன்று தக்காளி விலை அதிகபட்சமாக கிலோ ரூ.140 ஐ தொட்டுள்ளது. மற்ற காய்கறிகளும் கடந்த சில தினங்களில் வேகமாக விலை உயர்ந்த நிலையில் தற்போது மெல்ல விலை குறைந்து வருகிறது. எனினும் தக்காளி  விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments