Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கிலோ 30 ரூபாய் தான்.. வாங்க ஆளில்லாமல் இருக்கும் தக்காளி..!

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (07:25 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் என்று இருந்த நிலையில் தக்காளி விலை படிப்படியாக குறைந்து தற்போது ஒரு கிலோ 30 ரூபாய் என்ற நிலைக்கு வந்துள்ளது. 
 
நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரித்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதும் கிலோ கணக்கில் வாங்கியவர்கள் கிராம் கணக்கில் வாங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
100 ரூபாய்க்கு மேல் பல நாட்களாக தக்காளி விலை இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அதே நேரத்தில் தக்காளி வியாபாரிகள் லட்சாதிபதிகளாகவும் கோடீஸ்வரர்களாகவும் மாறினர். 
 
இந்த நிலையில் தற்போது தக்காளியின் விலை வீழ்ச்சி அடைந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ 30 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. அதையும் வாங்க ஆளில்லாமல் இருப்பதாக தக்காளி வியாபாரிகள் வருத்தத்துடன் கூறி வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments