Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கிலோ தக்காளி ரூ.40-த்துக்கு... வியாபாரிகள் கூறுவது சாத்தியமா?

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (12:23 IST)
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளி விலை உயர்ந்து வந்த நிலையில் தற்போது விலை குறையத் தொடங்கியுள்ளது.
 
தமிழகம் மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்து வரும் நிலையில் உள்ளூர் சந்தைகளில் தக்காளி வரத்து குறைந்ததால் கிடுகிடுவென விலை உயர தொடங்கியது. இதனால் அதிகபட்சமாக தக்காளில் விலை கிலோ ரூ.150 ஐ தாண்டி விற்றதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
 
இந்நிலையில் பசுமை பண்ணைகள் மூலமாக குறைந்த விலைக்கு தக்காளி விற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேசமயம் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் விலை குறைய தொடங்கியுள்ளது. சென்னையில் முதல் ரக தக்காளி கிலோவுக்கு ரூ.30 குறைந்து ரூ.80 ரூபாய்க்கும், நாட்டு தக்காளில் கிலோ ரூ.70க்கும் விற்பனையாகி வருகிறது. வரத்து அதிகரிக்க தொடங்கும்போது மேலும் விலை குறையும் என்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
 
இதனிடையே கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி மைதானத்தை திறந்தால் 1 கிலோ ரூ.40க்கு விற்க தாயார் என தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளனர். வழக்கமாக கோயம்பேட்டில் 86 சென்ட் பரப்பில் உள்ள மைதானத்தில் தான் தக்காளிகள் வந்து இறங்கும். தற்போது மைதானம் பூட்டப்பட்டுள்ளதால் தக்காளி இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments