Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை 50,000 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (19:05 IST)
நாளை 50,000 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நாளை தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு கடந்த சில வாரங்களாக மெகா தடுப்பூசி மையங்களை அமைத்து வருகிறது என்பது தெரிந்ததே. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு வந்த இந்த மெகா தடுப்பூசி மையம் இந்த வாரம் சனிக்கிழமை நடத்தப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் நாளை தமிழகத்தில் 50 ஆயிரம் மையங்களில் ஆறாவது கட்டமாக மாபெரும் தடுப்பூசி மையம் நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அவரே ஒரு சில மாவட்டங்களில் நேரடியாக சென்று தடுப்பூசி முகாம்களை பார்வையிட போவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போர் நிறுத்தம் செய்தி எதிரொலி: சுமார் 2000 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

இந்திரா காந்தி பண்ணுனது வேற.. மோடி கரெக்ட்டான ரூட்ல போயிட்டிருக்கார்!? - காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கருத்து!

ரூ.100 கோடி நில மோசடி விவகாரம்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன்..!

ஆன்லைனில் 5 லட்ச ரூபாய்க்கு கோகைன் ஆர்டர் செய்த பெண் டாக்டர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

இந்தியாவுக்குள்ள ‘கராச்சி’ பேக்கரியா? அடித்து துவம்சம் செய்த கும்பல்! - ஐதராபாத்தில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments