Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சோகம்’ - சுற்றுலாப் படகு கவிழ்ந்து 13 பேர் பலி!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (09:10 IST)
தாய்லாந்தில் நாட்டின் வடக்கு பாங்காங்கில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றுலா நகரான ஆயுத்தயா நகரில் ஓடும் சாயோ ப்ரயா ஆற்றில் படகு சவாரி செல்வது வழக்கம்.


 
 
இந்நிலையில், நேற்று சுமார் 100 பேரை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த படகின் அருகில் மற்றொரு படகு சென்று கொண்டிருந்தபோது, அந்த படகின் மீது மோதிக் கொள்ளாமல் இருப்பதற்காக படகோட்டி படகை திருப்பினார். 
 
அப்போது, எதிர்பாராத விதமாக, படகு அருகில் இருந்த பாலத்தின் கான்கீரட் பில்லர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இதில், 33 பேர் காயம் அடைந்துள்ளனர்.
 
இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments