Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உட்கார்ந்திருப்பவரையும் சேர்த்து வண்டியில் ஏற்றிய போலீசார் - அதிர்ச்சி வீடியோ

Webdunia
வெள்ளி, 1 ஜூன் 2018 (16:37 IST)
நோ பார்க்கிங் இடத்தில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தவரையும் சேர்த்து போக்குவரத்து போலீசார் வண்டியில் ஏற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.

 
புனேவின் விமன் நகரில் சாலையில் மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார். அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என போலீசார் போர்டு வைத்திருந்தனர். எனவே, அந்த வண்டியை அப்புறப்படுத்த போலீசார் அங்கு வந்தனர். ஆனால், அந்த வாலிபர் போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
 
எனவே, ஆத்திரமடைந்த போலீசார் அவரோடு சேர்த்து வாகனத்தை வண்டியில் ஏற்றி கொண்டு சென்றனர். சிறிது தூரம் சென்ற பின் அவரை இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். மேலும், அங்கு வண்டியை நிறுத்திய அந்த வாலிபருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
 
இது தொடர்பான வீடியோ வெளியானதை அடுத்து பலரும் போலீசாரை கண்டித்தனர். எனவே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆய்வாளர் பி.ஜி. மிசல் தெரிவித்துள்ளார். அதேபோல், போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments