Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் படிகளில் தொங்கினால் நடவடிக்கை! – ஓட்டுனர், நடத்துனருக்கு எச்சரிக்கை!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (08:57 IST)
மாணவர்கள் படிகளில் தொங்கி செல்ல அனுமதித்தால் ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளில் நின்றபடி பயணம் செய்வதும், சிலர் ஆபத்தான சாகச செயல்களில் ஈடுபடுவதும் கடந்த சில நாட்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. படிகளில் நின்று மாணவர்கள் பயணிப்பதால் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழக போக்குவரத்துத் துறை புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரி மாணவர்களை படிகளில் நின்றபடி பயணிக்க அனுமதித்தால் பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் கூட்டம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க உயரதிகாரிகளிடம் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments