Webdunia - Bharat's app for daily news and videos

Install App

39 தொகுதிகளில் எதில் வேண்டுமானாலும் போட்டியிடுவேன்: டிடிவி தினகரன் பேட்டி

Mahendran
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (10:09 IST)
வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடுவேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம் முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதி குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் பாஜக கூட்டணியில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் எந்த தொகுதியில் வேண்டும் ஆனாலும் நான் போட்டியிடுவேன் என்றும் நான் போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை என்றும் ஆனால் நான் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் விரும்புவதால் நிர்வாகிகளின் விருப்பத்திற்கு ஏற்ப நான் போட்டியிட உள்ளேன் என்றும் அவர் கூறினார். டிடிவி தினகரன் அனேகமாக சிவகங்கை போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments