Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடியமீன் ஆட்சியில் மாமியார் வீட்டிற்கு போவது யார்? தினகரன் பதிலடி!

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2018 (15:27 IST)
டிடிவி தினகரன் அதிமுக அமைச்சர் ஜெயகுமாரின் கருத்துக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். தற்போது தமிழ்கத்தில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் தலைவர்களின் பேச்சு தேர்தலை சுற்றியே உள்ளது. 
 
அந்த வகையில் சமீபத்தில் அமைச்சர் ஜெயகுமார், திருப்பரங்குன்றமும் தினகரனுக்கு கிடையாது, திருவாரூரும் கிடையாது, அவருக்கு திகார் சிறைதான் என்று கூறியிருக்கிறார். 
 
இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தினகரன் பேசியுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, ஜெயகுமார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும் பரவாயில்லை. அவர்கள் அணையபோகும் தீபங்கள். அவ்வாறுதான் பேசுவார்கள். 
 
ஆட்சி போகப்போகிறதே என்ற விரக்தியில் எது வேண்டுமானாலும் பேசுவார்கள். தமிழகத்தில் நடக்கும் அரசுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அவர்களை காவல் துறையை வைத்து மிரட்டுவது, அவர்கள் மீது கடுமையான சட்ட விதிகளின்படி வழக்கு தொடர்வது என்று செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.
 
தமிழகத்தில் இடியமீன் ஆட்சிபோல் அராஜக ஆட்சி நடக்கிறது. எந்த நிமிடம் ஆட்சி பறிபோகுமோ என்ற கோபத்தின் உச்சியில் இருப்பதால் இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றனர். மாமியார் வீட்டுக்கு யாரெல்லாம் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments