Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாம் புரட்சி தலைவர்: டிடிவி தினகரன் அட்ராசிட்டி!

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (16:42 IST)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுக கட்சி நிலையற்று கிடக்கிறது. முதல்வர் எட்டப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இணைந்து கட்சியையும் ஆட்சியையும் நடத்தி வருகின்றனர். 
 
சசிகலாவின் சகோதரரான டிடிவி தினகரன் கட்சியையும் ஆட்சியையும் மீட்பேன் என கூறி புதிய கட்சி ஒன்றை துவங்கி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். 
 
இந்நிலையில், கட்சியின் தலைமை அலுவலகத்தை சென்னை அசோக் நகரில் சமீபத்தில் திறந்தார். அவர் மீதுள்ள அதிருப்தியில் அலுவலக திறப்பு விழாவை சில முக்கியமானோர் புறக்கணித்தனர். 
 
ஆனாலும், இவை எதையும் வெளியில் காட்டமல் தினகரன் வழக்கம் போல் தனது பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். மேலும், கட்சியின் நிர்வாகிகளுக்கு சில உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறாராம். 
 
அதாவது, கட்சி விழாக்கள் மற்றும் பொதுக் கூட்டங்களிள் தினகரன் கலந்துகொள்ளும் போது, அவரை வரவேற்று அழைக்கும் போஸ்டர்களிலும், பேனர்களிலும், 'இரண்டாம் புரட்சி தலைவரே! என குறிப்பிடும்படி கட்டளையிட்டுள்ளாரா. 
 
இனி தினகரன் கட்சி சார்ப்பில் அடிக்கப்படும் போஸ்டர் மற்றும் பேனர்களில் இரண்டாம் புரட்சி தலைவரே என்பதை அடிக்கடி பார்க்ககூடும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments