Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாட்டிலைட் போன், துப்பாக்கி, 500 கோடி போதை பொருள்! – தூத்துக்குடியில் சிக்கிய மர்ம படகு!

Webdunia
ஞாயிறு, 29 நவம்பர் 2020 (12:09 IST)
தூத்துக்குடி அருகே கடல் பகுதியில் ரூ.500 கோடி மதிப்புடைய போதை பொருளை கடத்தி வந்த படகை கடலோர காவல்துறையினர் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி கடற்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுறுவல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க வழக்கம்போல கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது இலங்கை வழியாக அனுமதியின்றி வந்த படகு ஒன்றை மடக்கி பிடித்த அவர்கள் அதில் வந்தவர்களை கைது செய்துள்ளனர். படகை சோதனை செய்ததில் காலி டீசல் டேங்கிற்குள் சுமார் 100 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடுத்துள்ளனர்.

மேலும் சோதனை செய்ததில் 3 கிலோ க்ரிஸைல் மெத்தலின் பீட்டாமைன் என்ற போதை பொருளும், 5 துப்பாக்கிகளும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை பறிமுதல் செய்த கடலோர காவல்படையின, படகில் வந்தவர்களையும் கைது செய்துள்ளனர். கிலோ கணக்கில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்ததால் அவர்களுக்கு பயங்கரவாதிகளோடு தொடர்புள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments