Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000-க்கு மேல் மது குடித்தால் ஃப்ரிட்ஜ், எல்இடி டிவி பரிசு: சென்னையில் பகீர்!!

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2018 (13:27 IST)
சென்னையில் தீபாவளியை முன்னிட்டு 1000-க்கு மேல் மது குடித்தால் ஃப்ரிட்ஜ், எல்இடி டிவி பரிசு என்று பிளக்ஸ் அடித்து விளம்பரப்படுத்திய பார் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக்கில் குடிமகன்கள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. வருடாவருடம் தீபாவளியன்று டாஸ்காக் கலெக்‌ஷனில் பல கோடிகளில் புரளும் தமிழக அரசு இந்த தீபாவளிக்கும் டார்க்கெட் ஃபிக்ஸ் பண்ணியுள்ளார்களாம்.
 
இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டாஸ்மாக் கடையின் விளம்பரம் பலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்த விளம்பர பேனரில் 1000-க்கு மேல் மது அருந்தினால் ஃப்ரிட்ஜ், எல்இடி டிவி, வாஷிங் மெஷின் பரிசு என அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இதனைப் பார்த்த குடிமகன்கள் ஆயிரம் ரூபாய்க்கு குடித்துவிட்டு, ரோட்டில் செல்வோரை வம்பிழுத்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து போலீஸாருக்கு தெரியவரவே அவர்கள் பாரின் மேலாளரை கைது செய்தனர். மேலும் பாரிலிருந்த பரிசுப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

தமிழகத்தை போலவே ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அமைச்சரின் வருகையின் போது GOBACK சொன்ன திமுக நிர்வாகிகள்.. திமுக தலைமை நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments