Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் அமைச்சர் சி.வெ. கணேசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்!

J.Durai
சனி, 3 ஆகஸ்ட் 2024 (14:56 IST)
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி,பொடையூர், லக்கூர்,வடபாதி ஆகிய ஊர்களில் பொதுமக்களிடையே குறை கேட்கும் நிகழ்ச்சி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் தலைமையில் நடைபெற்றது.
 
இதில் ஆவட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ஆதிமூலம் மற்றும் 
மா பொடையூர் ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன் ஆகியோர்கள் அமைச்சர் முன்னிலையில் திமுக கட்சியில் இணைந்துள்ளனர்.
 
இந் நிகழ்விற்கு பின்னர்  பொது மக்களின் கோரிக்கைகளை  மனுக்களை பெற்றுக் கொண்டு அமைச்சர் பேசியதாவது......
 
படிப்படியாக பொதுமக்கள் கொடுத்த மனுக்களை பரிசீலனை செய்து உடனடியாக தீர்வு காணப்படும்.
 
பொதுமக்கள் எங்கள் ஊருக்கு பேருந்துகள் வரவில்லை என அமைச்சரிடம் தெரிவித்தனர்.
 
இதற்கு பதில் அளித்த அமைச்சர் லக்கூர் பேருந்து வழித்தடத்தை ஆக்கிருப்பு காரர்களிடம் இருந்து போலீசார் மற்றும் வருவாய் துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி பேருந்து வசதி செய்து தருவதாக உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே இறுதிவரை செய்யப்பட்ட முன்பதிவுகள் ரத்து.. வெறிச்சோடிய காஷ்மீர்.. பெரும் நஷ்டம்..!

தயார் நிலையில் இந்திய போர்க்கப்பல்கள்.. அரபிக்கடலில் நிறுத்தி வைப்பு.. எந்த நேரத்திலும் போர்?

என் குழந்தைகள காப்பாத்துங்க ப்ளீஸ் சார்! இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தானியர்!

கோவை விமான நிலையத்தை சேதப்படுத்திய த.வெ.க தொண்டர்கள்! - போலீஸார் வழக்குப்பதிவு!

இன்றுடன் கெடு முடிவு.. பாகிஸ்தானியர்களை வெளியேற்ற தீவிர நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments