Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீண்டாமை கொடுமை செய்த இருவர் கைது; கடைக்கு சீல்!

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (14:27 IST)
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகில் பாஞ்சாகுளம் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட  பள்ளி குழந்தைகளுக்கு திண்பண்டங்களை வழங்க முடியாது என திண்டாமை கொடுமை செய்த பெட்டிக்கடை சீல் வைக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள பஞ்சாகுளம் கிராமத்தில்  ஒரு பெட்டிக்கடை உள்ளது. இந்தப் பெட்டிக்கடையை மகேஷ்வரன்   மற்றும் ராமச்சந்திர மூர்த்தி ஆகிய இருவரும் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஆதி திராவிட பள்ளிக் குழந்தைகளுக்கு அவர் கடையில் வந்து பொருட்கள் கேட்டால் வழங்க முடியாது என கூறியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிகாரிகள் அக்கடைக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதன்பின்னர்,  சங்கரன் கோவில்  கோட்டாட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் தாசில்தார் பாபு முன்னியையில் அக்கடைக்குச் சீல் வைக்கப்பட்டு, கடையின் உரிமையாளர்கள்  கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments