Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 பள்ளிகளுக்கு ஜூன் 17ம் தேதி வரை விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 13 ஜூன் 2024 (10:14 IST)
புதுவையில் விஷவாயு தாக்கிய பகுதியில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு மட்டும் ஜூன் 17ஆம் தேதி வரை விடுமுறை என புதுவை மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 
 
புதுவையில் கடந்த சில நாட்களுக்கு முன் விஷவாயு தாக்கியதில் ஒரு மாணவி உள்பட 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரண உதவி குறித்து அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார் என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் புதுச்சேரி ரெட்டியார் பாளையம் புது நகரில் விஷவாயு தாக்கிய பகுதியில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு ஜூன் 17ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பது மட்டுமின்றி ஒரு மாணவியும் இறந்துள்ளதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக புதுவை மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 
அந்த இரண்டு பள்ளிகள் ஜூன் 18ஆம் தேதி முதல் வழக்கம் போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments