எல்லோரும் வருகிறார்கள் ; இனிமேல் தீவிர அரசியல்தான் - உதயநிதி ஸ்டாலின் அதிரடி

Webdunia
திங்கள், 22 ஜனவரி 2018 (11:28 IST)
நடிகர் அரசியலுக்கு தொடர்ந்து வருவதால் தானும் தீவிர அரசியலில் களம் இறங்கவுள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 
தனது தாத்தா கருணாநிதி முதல் தந்தை ஸ்டாலின் வரை குடும்பத்தில் பலரும் அரசியலில் இருந்தாலும், சினிமா தயாரிப்பு துறையில் நுழைந்து, பின் நடிகராக தன்னை மாற்றிக்கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். 
 
இந்நிலையில், இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் “நான் ஏற்கனவே திமுகவி இருக்கிறேன். சினிமாவிற்கு வருவதற்கு முன்பே அரசியலில் ஈடுபட்டு வந்தேன். தேர்தலின் போது திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், முரசொலிமாறன் ஆகியோருக்காக வாக்குகள் சேகரித்துள்ளேன். ஆனால், சினிமாவில் நடிக்க தொடங்கிய பின் அரசியலை விட்டு விலகி இருந்தேன். இப்போது, பல நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக அறிவித்து வருகின்றனர். எனவே, நானும் தீவிர அரசியலுகு வரும் நேரம் நெருங்கிவிட்டதாக உணர்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments